articles

img

வரலாற்றியல் பொருள் முதல் வாதத்தை அறிய சிறந்த கருவூலம்

அ.அன்வர் உசேன்

மார்க்சிய மூலவர்கள் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் படைப்புகளில் மிகவும் குறைவாக அறியப்பட்ட நூல்களில் ஒன்று “ஜெர் மானிய சித்தாந்தம்” (The German ideology) என்பதாகும். எனினும் இந்த நூல் மிக முக்கியமான ஒன்று.  ஏன்?

ஏனெனில் இந்த நூலில்தான் மார்க்சும் ஏங்கெல்சும் வரலாற்றி யல் பொருள்முதல்வாத கண்ணோட்ட த்தை அறிவியல் அடிப்படையில் முதன்முதலாக முன்வைக்கின்றனர். இன்னும் சரியாக கூறுவதானால் அந்த கண்ணோட்டத்தை முதன் முதலாக ஒட்டுமொத்த வடிவில் அவர்கள் உள்வாங்கி கொண்டு அவற்றை முன்வைக்கின்றனர். அந்த வகையில் இந்த நூல் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை அறிய மிகச்சிறந்த கருவூலம் எனில் மிகை அல்ல. மார்க்ஸ் காலத்தில் இந்த நூலை பதிப்பிக்க எந்த பதிப்பாளரும் முன்வரவில்லை. எனவே இந்த நூல் சோவியத் புரட்சிக்கு பின்னர்தான் வெளியிடப்பட்டது. 

மார்க்சிய பரிணாமத்தின் தொடக்கம்

இந்த நூல் 1845-47 காலகட்டத்தில் எழுதப்பட்டது. அதாவது கம்யூனிஸ்ட் அறிக்கைக்கு முன்பு எழுதப்பட்ட நூல். பிரான்ஸ் அரசால் நாடு கடத்தப்பட்ட காரல் மார்க்ஸ் 1845 பிப்ர வரியில் பிரஸ்ஸல்ஸ் வந்து சேர்ந்தார்.  ஏங்கெல்ஸ் 1845 ஏப்ரலில் அங்கு வந்தார். இருவரும் சேர்ந்து இந்த நூலை உருவாக்கினர். இந்த நூலும் இந்த காலகட்டமும்தான் புரட்சிகர பாட்டாளி வர்க்கத்தின் அறிவியல் பூர்வமான கம்யூனிச கோட்பாடுகளாக மார்க்சியம் பரிணமித்த சூழல் ஆகும். எனவேதான் இந்த நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அன்று ஜெர்மனியில் தத்துவத்தில் கோலோச்சிக் கொண்டிருந்த புருனோ பாவர்/ மாக்ஸ் ஸ்டிரைனர்/ பாயர்பாக் ஆகியோருடன் நடந்த சித்தாந்த மோதல்தான் இந்த நூலின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்றா லும் வரலாற்றியல் பொருள் முதல்வா தத்தின் பல்வேறு கோட்பாடுகளை ஒருங்கிணைத்து முதல்முறையாக மார்க்சும் ஏங்கெல்சும் முன்வைக்கின்ற னர். இந்த நூலை, குறிப்பாக முதல் பாகத்தை படிக்கும் பொழுது மார்க்ஸ்/ ஏங்கெல்ஸ் சிந்தனைகளோடு நாமும் பயணிப்பதை உணரலாம். அதாவது அவர்களின் சிந்தனை எப்படி இந்த புள்ளிக்கு வந்தடைந்தது என்பதை நாம் அறியலாம். அது வரலாற்றியல் பொருள் முதல்வாதக் கோட்பாடுகள் மீது நமக்கு ஆழமான ஈடுபாட்டையும் பிடிமானத்தையும் உருவாக்கும்.

இந்த நூல் குறித்து பின்நாட் களில் எழுதிய ஏங்கெல்ஸ், சமூக அறி வியலில் காரல்மார்க்சின் மகத்தான இரண்டு கண்டுபிடிப்புகளில் ஒன் றான வரலாற்றியல் பொருள்முதல் வாதத்தை இந்த நூல் முன்வைக்கிறது எனவும் (இன்னொரு கண்டுபிடிப்பு உபரிமதிப்பு) இதன் மூலம் அதுவரை கற்பனாவாதமாக இருந்த சோசலிசம் அறிவியல்பூர்வமான கோட்பாடாக பரிணமித்தது எனவும் குறிப்பிடுகிறார். இந்த நூலில் முன்வைத்த பல் வேறு கோட்பாடுகள்தான் பின்னால் பல படைப்புகளில் செழுமைப்படுத்தப் பட்டன. இதற்கு பின் உடனடியாக வெளிவந்த “தத்துவத்தின் வறுமை” எனும் நூலும் “கம்யூனிஸ்ட் கட்சி யின் அறிக்கை” எனும் மகத்தான படைப்பும் உள்ளடக்கிய பல முக்கிய கருத்துகளும் ஜெர்மானிய சித்தாந்தம் எனும் நூலில் முன்வைக்கப்படு கின்றன. 

நடைமுறைப் பணியே தொடக்கப்புள்ளி

இந்த நூல் வெறும் நாற்காலி சித்தாந்தவாதிகளின் எழுத்துக்கள் அல்ல. இந்த நூலை எழுதும் பொழுதே ஐரோப்பா மற்றும் ஜெர்மனியின் பாட்டளிவர்க்க உழைப்பாளிகளுடன் மார்க்சும் ஏங்கெல்சும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். பாட்டாளி களை தம் கொள்கைகள் பக்கம் வென் றெடுக்க இந்த நூலில் முன்வைக்கப் பட்ட  கருத்துகள் மிகப்பெரிய ஆயுத மாக பயன்பட்டன. எனவே பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப்போராட்டம் எனும் நடைமுறைப் பணிக்கு வழி காட்டுவது என்பதே இந்த நூலின் கருத்துகள் ஆகும். அன்றைய பல  அரசியல் போராட்டங்களிலும் நிகழ்வு களிலும் மார்க்சும் ஏங்கெல்சும் நேரடி யாக பங்கேற்றனர். நடைமுறை போராட்டங்களும் சித்தாந்தமும் ஒன்றி ணைந்த பணியின் ஒரு பகுதியாகவே. இன்னும் சொல்லப்போனால் நடை முறைக்காகவே இந்த நூலின் முக்கிய கருத்துகள் உருவாக்கப்பட்டன. 

இந்த நூலை எழுதுவதற்கு முன்னோடியாக காரல் மார்க்சால் தயாரிக்கப்பட்டதுதான் “பாயர்பாக் பற்றிய குறிப்புகள்” (Theses on Feuerbach) ஆகும். அதன் 11வது குறிப்புதான் உலகப் புகழ்பெற்ற கீழ்கண்ட கூற்று:“தத்துவவாதிகள் உலகை பல் வேறு வகைகளில் வியாக்கியானம் செய்துள்ளனர்; இன்றைய தேவை என்னவெனில் அந்த உலகை மாற்றி யமைப்பதுதான்”.

நடைமுறைதான் அனைத்துக்கும் தொடக்கம்; சிந்தனை/ அறிதல் போன்ற (தத்துவங்கள் உட்பட) அனைத்துக்கும் தொடக்கப்புள்ளி நடைமுறைதான்! சமூக மாற்றத்துக் காக தீவிரமான காரணியாக சித்தாந்தம் இருக்க வேண்டுமெனில் அது உயிர்த்துடிப்புள்ள புரட்சிகரமான நடவடிக்கைகளோடு ஒன்றிணைந்து ஒன்றாக கலந்திருக்க வேண்டுமென மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு

இந்த நூலின் தொடக்கத்திலேயே மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்:

“மனிதனும் விலங்கும் உணர்வினாலும் அல்லது மதத்தாலும் வேறுபடுகின்றனர் என நீங்கள் விரும்பும் வகையில் கூறலாம். ஆனால் உண்மையில் மனிதன் எப்பொழுது தன் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை தானே உற்பத்தி செய்ய தொடங்கினானோ அன்றுதான் அவன் விலங்கிலிருந்து வேறுபட்டான்.”

மனிதர் எந்த பொழுதுபோக்கு அல்லது கேளிக்கையிலும் ஈடுபடு வதற்கு முன்பு உயிர்வாழ உணவும் உடையும் இயற்கையிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள இருப்பி டத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும்; அந்த உற்பத்திக்காக அவர் இயற்கை யை பயன்படுத்த வேண்டும்; அதற்கு அவர் தனது உழைப்பை ஈடுபடுத்த வேண்டும். எனவே இயற்கையை பயன்படுத்த அவன் முன்வைக்கும் உழைப்பும் உற்பத்தியும்தான் மனி தரை விலங்கிலிருந்து வேறு படுத்தும் அடிப்படை காரணி என மார்க்சிய மூலவர்கள் கூறுகின்றனர். 

மனிதர் எந்த பொழுதுபோக்கு அல்லது கேளிக்கையிலும் ஈடுபடு வதற்கு முன்பு உயிர்வாழ உணவும் உடையும் இயற்கையிலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள இருப்பி டத்தையும் உற்பத்தி செய்ய வேண்டும்; அந்த உற்பத்திக்காக அவர் இயற்கை யை பயன்படுத்த வேண்டும்; அதற்கு அவர் தனது உழைப்பை ஈடுபடுத்த வேண்டும். எனவே இயற்கையை பயன்படுத்த அவன் முன்வைக்கும் உழைப்பும் உற்பத்தியும்தான் மனி தரை விலங்கிலிருந்து வேறு படுத்தும் அடிப்படை காரணி என மார்க்சிய மூலவர்கள் கூறுகின்றனர். அவ்வாறு உற்பத்தியில் ஈடுபடும் பொழுது மனிதர்கள் தமக்குள் உறவு களை உருவாக்குகின்றனர். இதனை உற்பத்தி உறவு என மார்க்சும் ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர். ஒரு புறம் இயற்கை வளமும் உற்பத்தி கரு விகளும் உழைப்பும் அடங்கிய உற்பத்தி சக்திகள்; மறுபுறம் உற்பத்தி உறவுகள். இவை இரண்டுக்கு மிடையே உள்ள இயக்கவியல் நிகழ்வு களை மார்க்சும் ஏங்கெல்சும் இந்த நூலில் விளக்குகின்றனர். 

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உற்பத்தி உறவுகள் ஒரு கட்டத்தில் அவற்றின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக மாறுகின்றன. அந்த புள்ளியிலிருந்து சமூக முரண் பாடுகள் பல வடிவங்களில் தொடங்கு கின்றன. இறுதியில் உற்பத்தி சக்திகள் தமது வளர்ச்சிக்கு தடையாக உள்ள உற்பத்தி உறவுகளை தூக்கியெறிந்து புதிய உற்பத்தி உறவுகளை உருவாக்கு கின்றன. இதுவே சமூகப் புரட்சி எனப் படுகிறது. மனிதகுல வரலாறு முழு வதும் உற்பத்தி சக்திகளுக்கும் உற் பத்தி உறவுகளுக்கும் இடையே உள்ள இயக்கவியல் நிகழ்வுகள்தான் - குறிப்பாக முரண்பாடுகள் தான் சமூகப் பயணத்தின் உந்து சக்தியாக இருந்து வருகிறது என இந்த நூலில் மார்க்சும் ஏங்கெல்சும் குறிப்பிடுகின்றனர். இதில் முதலாளித்துவ உற்பத்தி முறை எப்படி வேறுபட்டது என்பதையும் அது உருவாக்கும் பாட்டளி வர்க்கத்தின் செயல்பாடுகளையும் விளக்கும் இந்த  நூல் பாட்டாளி வர்க்கம் என்ன செய்ய  வேண்டும் என்பதையும் அதன் தொடக்க வடிவில் குறிப்பிடுகிறது.

புரட்சி ஏன் தேவை?

முதலாளித்துவ அரசு குறித்து கீழ்கண்டவாறு நூல் குறிப்பிடுகிறது. “சமூகத்தின் உள் மற்றும் வெளி காரணங்களுக்காக தமது சொத்துக் கள் மற்றும் நலன்களை பரஸ்பரம் பாதுகாத்து உத்தரவாதப்படுத்திக் கொள்ள முதலாளித்துவம் உருவாக்கி கொள்ள நிர்பந்தப்படுத்தப்படும் ஒரு ஸ்தாபன அமைப்புதான் அரசு”.  புரட்சி ஏன் தேவை என்பதையும் இந்த நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர்: “புரட்சி என்பது ஆளும் வர்க்கங் களை தூக்கி எறிய தேவை என்பது மட்டுமல்ல; ஆளும் வர்க்கங்களை தூக்கி எறியும் வர்க்கங்கள் பல சகாப்தங்களாக உள்ள புறச்சூழல்கள் அவர்கள் சிந்தனைக்குள் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கு சேற்றை யும் சகதிகளையும் அகற்றிக் கொள்ள வும் புதிய சமூகத்தைப் படைக்கவும் புரட்சி தேவைப்படுகிறது” இந்த நூலை பதிப்பாளர்கள் பதிப்பிட மறுத்தது குறித்து பின்னாளில் மார்க்ஸ் குறிப்பிட்டார்: “நாங்கள் எங்களின் கைப்பிர தியை, சுண்டெலிகளின் கூக்குரல்கள் மிகுந்த விமர்சனத்துக்கு இடையே, விருப்பப்பட்டே கை விட்டுவிட்டோம். ஏனெனில் எங்களது முக்கிய நோக்க மான ‘சுய தெளிவுபடுத்துதல்’ என்ப தை நாங்கள் சாதித்து கொண்டோம்.” வரலாற்றியல் பொருள்முதல் வாதம் குறித்து நீங்கள் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சிடமிருந்து கற்க வேண்டுமா? அப்படியானால் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய முதல் நூல் “ஜெர்மானிய சித்தாந்தம்”தான்! குறிப்பாக முதல் 100 பக்கங்கள்!

ஜெர்மன் தத்துவம் ஆசிரியர்கள் : மார்க்ஸ், ஏங்கெல்ஸ், வெளியீடு : சோவியத் யூனியன் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ்- லெனின் படைப்புகள் ஆராய்ச்சி நிறுவனம், மாஸ்கோ(1932)